கொரோனா வைரஸ் : அலட்சியப்படுத்த வேண்டாம்.. மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

கொரோனா என்னும் கோவிட் – 19 என்னும் வைரஸ் தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறண்ட இருமல்.

ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள்.

இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது அவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது இந்த நேரத்தில் முக்கியம் என்றும் கூறுகிறார்கள். முடிந்தவரையிலும் உங்களுக்கு அறிகுறி தெரிந்தால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் பலவும் சமயத்தில் வைரஸ் தொற்றாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப குணப்படுத்துவதும் அவசியம் என்பதை இத்தருணத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ்

சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற் கப்படும் இடத்தில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரி டப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று வதாக சீன நாட்டின் தேசிய சுகாதரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதாரா நிறுவனமும் இவை மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.

கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 இலட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த தொற்றுக்கு இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு விலங்குகளுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றை குணப்படுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்றுவரை இதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் எச்சரிக்கையும் சுகாதாரமும் மட்டும் தான் இப்போதைக்கு நம்மை காப்பாற்றும்.

காப்பாற்றும்.

இந்தியாவில் கொரோனா

சீன நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பியவர்கள் சிலருக்கு இந்த தொற்று இருப் பதை அமெ ரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து நாடு உறுதி செய்தது. இதை தொடர்ந்து சீனா, ஹாங்காங் மற்றும் மற்ற பகுதியிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தெர்மல் ஸ்க்ரீனிங் சோதனை செய்யப்பட்டது. இதில் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கலாமோ என்ற சந்தே கத்தின் அடிப்படையில் கேரளா, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் சேர்ந்த பயணிகள் சுமார் ஒரு லட்சம் பேரை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியது. பிறகு அதில் தொற்று இருப்பவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின்பு குணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் இந்த தொற்று 1000 பேருக்கு மேல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 85 பேர் குணமடைந்த நிலையில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது கட்டத்தில் நாம் இருந்துவருகிறோம். இந்த கட்டத்தை அபாயமில்லாமல் தாண்டிவிட்டால் சற்றே மூச்சிவிடக்கூட முடியும். இல்லையெனில் அதிகப்படியான ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பது மறுக்கமுடியாது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் இதற்கான தயார் நிலையில் படுக்கை வசதிகளை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் தலைமை மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இந்த வைரஸை எதிர்கொள்வ தற்கான சோதனை மையம், தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம்.

காய்ச்சல்

சாதாரண காய்ச்சல் போன்று வரும் இந்த வைரஸ் தொற்று மூன்று நாட்களுக்கு மேலும் குறையாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை காட்டிலும் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்திலிருந்து யாராவது வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருக்கலாம். அல்லது அங்கு பயணம் செய்த உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்தித்து இருக்கலாம். அக்கம் பக்கத்திலும் வெளிநாடு பயணத்தோடு யாரேனும் தொடர்பு கொண்டிருக்கலாம். அதனால் காய்ச்சலுக்கு சுயமாக மாத்திரைகள் எடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இந்த தொற்று பரவிய பிறகு 14 முதல் 20 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தெரிகிறது என்பதால் பரவுவதும் அதிகரித்துவருகிறது.

உடல் வெப்பத்தை காட்டிலும் அதிகமான வெப்பம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் வைரஸ் தொற்று பரிசோதனை தாமதிக்காமல் செய்ய வேண்டும். காய்ச்சல் தொற்று இருந்தால் இந்த நேரத்தில் சுய வைத்தியம் வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது மருத்துவத்துறை. தற்போது காய்ச்சலில் தொற்று என்பது 14 நாட்களுக்கு பிறகு இதன் அறிகுறி தென்படுவதாலும் 27 நாட்களுக்கு பிறகு தொற்று இருப்பது தெரியவருவதாலும் வேகமாக இந்த தொற்று பரவி வருவதை தடுக்க முடியாமல் போவதாக மருத்துவத்துறை கவலை தெரிவிக்கிறது. அதனால் சளி, இருமல் அறிகுறி இருந்தாலே தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

இருமலும், சளியும்

பொதுவாக காய்ச்சல் வந்தால் சளியும், இருமலும் உடன் வரும். அதனால் இவை உடல் சூடு அல்லது குளுமையால் தான் என்று முடிவெடுக்கவேண்டாம். தொடர் இருமலும், சளியும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சலின் போது இரு மலும், சளியும் இருப்பவர்கள் பொது இடங்களிலும் துப்ப வேண்டாம்.

வீட்டிலும் தனி கழிவறையையோ அல்லது உபயோகத்துக்கு பின்பு நீரை விட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளிக்கவோ வேண்டும். யாருடைய கைகளிலும் குலுக்க வேண்டாம். கைகளை கழுவாமல் முகத்தில் குறிப்பாக மூக்கு, கண் பகுதியில் துடைக்க வேண்டாம்.வீட்டில் இருப்பவர்களிடமிருந்து தனிமை படுத்தி கொள்ளுங்கள். தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள்.

வீட்டிலும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவது அனைவருக்கும் பாதுகாப்பா னது. தும்மல் வந்தால் கைகளை கொண்டு மூடி தும்முவதோடு உடனடியாக கைகளை சோப்பு நீர் கொண்டு சுத்தமாக கழுவுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும்போது கவனமாக கைகளை தேய்க்க வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கை களை சோப்பு கொண்டு கழுவுங்கள்.

மூச்சுத்திணறல்

தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் இந்த அறிகுறிகளையும் கவனியுங்கள் காய்ச்சலோடு தொண்டை செருமல், தலைவலி, மூச்சுதிணறலும் உண்டாககூடும். எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளையும், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்த கர்ப்பிணிக ளையும், வயதானவர்களையும் எளிதில் தொற்றி பாதிப்பை உண்டாக்க கூடியது என்பதால் இவர்களை அதிக கவனமாக பார்த்துகொள்வது நல்லது

இதை தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்க ளுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதற்காக இந்த அறிகுறிகள் இருந்தாலே கொரோனா வைரஸ் நமக்குமா என்ற பயம் வேண்டாம். அதே நேரம் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவும் வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் முக்கிய அறிவுரை.

காய்ச்சல் என்று வந்தாலே திரவ உணவு எடுத்துகொள்ளுங்கள். கண்டிப்பாக ஓய்வும், போதுமான தூக்கமும் கண்டிப்பாக கடைபிடியுங்கள். இயன்றவரை சுய வைத்தியம் வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் இப்போதைய அறிவுரை. கண்டிப்பாக மருத்துவரது ஆலோசனையோடு தனிமை தான் இப்போதைக்கு அனைவருக்கும் பாதுகாப்பானது.

நமது நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு (144) உத்தரவை அனைவரும் பின்பற்றினால் வைரஸை கட்டுப்படுத்தலாம்

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

ஹாய் நண்பர்களே உங்கள் அனைவரும் இனிய வணக்கம்

அனைவருக்கும் ஒரு சிறு கதை சொல்ல போகிறேன்,

#வேலையில்_மட்டுமல்ல..
************////***********

ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்…
அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்… ராமசாமி பி.இ முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது …

அவரின்
பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்… ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க…. இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்…

ஆனால்
மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்… வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை… வீட்டில் மட்டுமா?… சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்…

அதுமட்டுமா?… ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்… இட்லிகடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக்கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக்கடை வை என்று…..

மாடசாமியின் அப்பாவுக்கோ சொல்லவொண்ணா வேதனை… மகன் இப்படி செய்து விட்டானே என்று… மாடசாமியோ இடிந்து போய் விட்டான்…

கடைசியில்
ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்…

ஆனால்
ராமசாமி க்ரடிட் கார்டுமூலம் பைக் வாங்குகிறார்… மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்…

மாடசாமியோ டி.வி.எஸ் 50 வாங்குகிறார்… அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்… இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்…

ராமசாமி மகிழ்ச்சி பொங்க ‘ஹாய்’ என்று சொல்லி கையசைக்கிறார்… மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு ‘ஹாய்’ சொல்லிவிட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்…

ஆறு மாதங்களுக்குப் பிறகு…….

ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்…. மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்…

அதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடுகிறார்… இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்… இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்…

ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது… மாடசாமிக்கோ… தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது…

ஒரு வருடத்திற்குப் பிறகு………

ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்… பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை….

இப்போது
அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது… மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது…

அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து… அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்…

ராமசாமி தன் பைக் லோனை அடைத்துவிட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்…

அதைக்கொண்டு
வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், எல்.சி.டி டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்… சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்…

மாடசாமியோ… மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்….

இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்… ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது… மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்… காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை….

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது… அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்…

அந்த சமயத்தில் மாடசாமி… எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்…

மேலும்
அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்… இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது…

இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது… மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி… பால் வியாபாரத்தை கவனிக்கிறார்… இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்…

ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க….. இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்…..

நான்கு வருடங்களுக்குப் பிறகு……….
ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்…

மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது….மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்…..

இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது…. லிட்டர் விலை 40 ரூபாய்… மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது…

வேறு வழி இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்…. இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்….

ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்… அதேமாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்… இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்….

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…..

ராமசாமியின் வருட வருமானம் 30 லட்சமாய் உயர்ந்திருக்கிறது… ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது…

என் அன்புக்குாியவா்களே ,
இந்த உண்மை சம்பவத்தை படிக்கும் பொது..
2008 ல் பாலின் விலை… லிட்டர்15 ரூபாய்… இப்போது 40 ரூபாய்… அப்போது தங்கம் பவுன் 12,500. இப்போது பவுன் 25,000. ஐந்து வருடங்களாக பொறியாளர்களின் சம்பள உயர்வு 30% மட்டுமே…

ஆனால்
பெரும்பாலான மக்கள் பொறியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்கள்….ஆனால் அது,

உண்மையல்ல.
பேசாம மாடோ, எருமையோ மேய்க்கப் போயிருக்கலாமோ !!!! என உங்களுக்கு தோன்றுகிறதா..

சம்பாத்தியம் எதுவானாலும் நம்மை இந்த எருமைபண்ணை காரனை விட ஆசீா்வதிக்கும் தேவன் நம்மோடு இருக்கிறாா்.

பைபிள் சொல்கிறது…
என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்மபாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக,

அவரே
உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப் படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். (உபாகமம் 8:17,18)

ஐஸ்வாியத்தை சம்பாதிக்கும் பெலன் என்பது சரீர பெலன் மாத்திரமல்ல ஞானம், அறிவு, புத்தி, விவேகம், தெளிந்தபுத்தி ,சாமாா்த்தியம், திறமை, சமா்த்து,, மகிழ்ச்சி,மனபெலம் ஆகிய பதினொரு விஷயங்கள் பெலன் எனப்படும்.

தேவன் ஐஸ்வா்யத்தை சம்பாதிப்பதற்கு இந்த பதினொரு காாியங்களைத் தான் தேவன் பெலனாகக் கொடுக்கிறாா்.

எனவே தான் தொழில், வேலை, வியாபாரம், ஊழியம் ஆகிய எதுவானாலும் நீங்கள் பண்ணைக்காரனை விட ஆசீாவாதங்களை நீங்கள் பெற்று கொள்வீா்கள்.

கர்த்தர்
உங்கள் களஞ்சியங்களிலும்,நீங்கள் கையிடும் எல்லா வேலையிலும் உங்களுக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே உங்களை ஆசீர்வதிப்பார்.

ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்திலே மழை பெய்யவும், நீங்கள் கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உங்களுக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்,

நீங்கள்
அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பீா்கள்
நீங்கள கடன் வாங்காதிருப்பீா்கள். . கர்த்தர் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார், நீங்கள் கீழாகாமல் மேலாவீா்கள்..
(உபாகமம் 28:8-14)

மேற்கண்ட வசனத்தின்படி தேவன் உங்களை மேன்மைப் படுத்துவாா். இன்று முதல் தேவனையும், அவரது வல்லமையையும் மையமாக வைத்து வாழுங்கள்.

*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்…!!!…*

Design a site like this with WordPress.com
Get started